சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தரமற்ற மதிய உணவால் மூன்று ஆண்டுகளில் 900 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டார்கள், இறப்பு எண்ணிக்கை ‘0’: மனித வள மேம்பாட்டுத்துறை!

பள்ளி அளவிலான சமையலறைகளில் தரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த வழிகாட்டுதல்களையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:33 am

RKV

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் தரமற்ற உணவுக்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு 2016 முதல் 35 புகார்கள் வந்துள்ளன

கடந்த மூன்று ஆண்டுகளில் மதிய உணவு உட்கொண்டதால் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே காலகட்டத்தில் தரமற்ற உணவு தரம் குறித்து 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து (யு.டி.) 35 புகார்களை அமைச்சகம் பெற்றுள்ளது.

"மொத்தம் 930 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் நாட்டில் இதுபோன்ற உணவை சாப்பிட்ட பின்னர் அவர்களில் யாரும் இறக்கவில்லை. தகுதியான குழந்தைகளுக்கு சமைத்த மற்றும் சத்தான மதிய உணவை வழங்குவதற்கான ஒட்டுமொத்த பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது, ”என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதிய உணவு திட்டம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் வருகிறது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகளை (ஏடிஆர்) வழங்குமாறு தொடர்புடைய மாநில அரசுகள் கோரப்பட்டன, என சம்பந்தப்பட்ட உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்

"பெறப்பட்ட அறிக்கைகளின்படி, குறிப்பிட்ட பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிக்கு எதிராக எச்சரிக்கை விடுப்பது, சம்பந்தப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஒப்பந்தத்தை நிறுத்துதல், குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது மற்றும் உரிய முறைகளைப் பின்பற்றத் தவறிய நபர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள்" மேற்கொள்ளப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

பள்ளி அளவிலான சமையலறைகளில் தரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த வழிகாட்டுதல்களையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டுதல்கள் மதிய உணவு தயாரிக்க AGMARK தரமான பொருட்களை வாங்குவது, பள்ளி நிர்வாகக் குழுவின் இரண்டு அல்லது மூன்று... வயதுவந்த உறுப்பினர்களால் உணவைச் சுவைப்பது, குறைந்தது ஒரு ஆசிரியர் உட்பட... என குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை அந்த வழிகாட்டிகள் வழங்குகின்றன" என்று துறை அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.