தனது தலைவலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள சிதியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் உமாசங்கர் ஐஏஎஸ். தனக்கான சிகிச்சைக்காக அங்கே சென்றவர் பிறகு தன் சிகிச்சையை மறந்து அங்கே இருந்த பிற நோயாளிகளுக்கு மதபோதனையும், ஃபெய்த் ஹீலிங்கும் செய்யத் தொடங்கவே அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர் உமாசங்கரின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் பிறகே இந்தச் செய்தி ஊடகங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆயினும் இவ்விஷயத்தில், தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்களென அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவலும் உமாசங்கர் ஐஏஎஸ் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.