கடந்த புதன் அன்று, லக்னெளவிலிருந்து புறப்பட்டு டெல்லியில் தரையிறங்க வேண்டிய அல்லயன்ஸ் ஏர் ஃப்ளைட் விமானம் (ஏர் இந்தியாவுக்குச் சொந்தமானது)... பாதி வழியில் ராஜஸ்தானை நெருங்கியதும் அங்கிருந்த சங்கனேர் விமான நிலையத்தில் தரையிறங்கியது., அத்தோடு தனது வேலை நேரம் முடிந்து விட்டதால்.. இனி தன்னால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாது, ‘பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின்’ ஆணையின் படி, ஒரு விமானி தனது வேலை நேரத்தையும் தாண்டி அதிகப்படியாக விமானத்தை இயக்க வேண்டியது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விமானிகளுக்கான பொது விதி. அதன்படி தான் இனி இந்த விமானத்தை இயக்க முடியாது. என்று கூறி விமானி, விமானத்தையும், அதனுள் டெல்லியில் தரையிறங்கக் காத்திருந்த பயணிகளையும் அம்போவென பாதியில் விட்டு விட்டு இறங்கிச் சென்றுள்ளார். புதனன்று ராஜஸ்தானில் தரையிறக்கப்பட்ட விமானம், வியாழன் வரையிலும் அங்கு தான் இருந்திருக்கிறது.