பாராளுமன்றத்தில் திங்கள் அன்று தற்கொலை முயற்சியை தண்டனைக்குரிய குற்றச் செயலாக கருதக் கூடாது எனக் கோரிய புது சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றும் சமூக சுகாதார ஆர்வலர்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப் படுகிறது. ஏனெனில் இந்த சட்டத் திருத்த மசோதாவானது, தற்கொலை முயற்சியை தண்டனைக்குரிய செயலாகக் கருத விடாமல் செய்வதோடு, மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார உரிமைகளையும் கோருகிறது. இந்த சட்டத்திருத்தமானது நிச்சயம் மனநல பாதிப்பால் தற்கொலை முடிவெடுத்து காப்பாற்றப் பட்டு சட்ட நெருக்கடிகளால் அச்சுறுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் மனநலப் பாதிப்பு கொண்டவர்களுக்கு மிகப் பெரிய ஆசுவாசத்தை தரும் என்பதில் ஐயமில்லை.