மரணித்த ஷரன் ரிகோலி, தான் பணிபுரிந்த பள்ளியில் மிகுந்த நம்பிக்கையையும், அன்பையும் சம்பாதித்தவராகவே கருதப்படுகிறார். ஷரனின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள அவரது பள்ளித் தலைவரான பிரையன் ஃபெராரா, பிட்ஸ்பர்க் ட்ரிபியூன் இதழுக்கு அளித்த இரங்கல் குறிப்பில் ‘ ஷரனின் மாணவர்கள் தங்களது கோடை விடுமுறையிலிருந்து திரும்பக் கூடிய நாள் இது, இப்போது போய் ஷரனுக்கு இப்படியொரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க கூடாது, ஷரனை இழந்ததால் பள்ளியில் உண்டான வெற்றிடம் தங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.’ எனக் கூறி இருக்கிறார்.