அங்கு 20 வயதான ரத்னம் எனும் காட்டெருமையுடன், விஜய் எனும் இளம் காட்டெருமை கடுமையாக மோதிக் கொண்டிருந்தது. உயிரியல் பூங்காவில், விலங்குகளைப் பராமரிக்கும் சிறப்புப் பணியாளர்கள் உடனடியாக அங்கு விரைந்து அதிகக் காயங்களுடன் சண்டையில் தோற்று சோர்வுற்றிருந்த ரத்னம் எனும் காட்டெருமையை மீட்டு அரசு சரணாலய வளாகத்திலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரத்னத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், ஞாயிறு காலையில் ரத்னம் உயிரிழந்து விட்டதாக உயிரியல் பூங்கா பணியாளர்கள் தெரிவித்தனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இளம் காட்டெருமையான விஜயுடன் பிற காட்டெருமைகள் சண்டையிட்டுத் தோற்று மரணம் நேர்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பு, 2011 ஆம் ஆண்டில் மணி என்ற 20 வயது காட்டெருமை இதே விதமாக சண்டையிட்டு மாண்டது, அப்போது விஜய்க்கு வயது 6 என்பது குறிப்பிடத்தக்கது.