முன்பெல்லாம் நண்பர்களோ, உறவினர்களோ நேரில் சிக்கினால் தான் சுய தம்பட்டம் அடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் சுய தம்பட்ட ஆர்வலர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் கூடத் தேவையில்லை. கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன், அதில் ஒரு முகநூல் கணக்கு. அதில் கணிசமான ஃபாலோயர்கள் இருந்தால் போதும். உடனே உங்கள் வீட்டில் நீங்கள் தும்மினாலும், விக்கிக் கொண்டு தண்ணீர் குடித்தாலும் உடனுக்குடன் முகநூலில் புகைப்படங்களுடன் அப்டேட் செய்து விடலாம். அதைப் பார்த்து வாவ்... விக்கல், ஹே தும்மல்... ஃபைன், லவ்லி, lol, ROFL, என்றெல்லாம் பின்னூட்டமிட்டு லைக் செய்ய கியூவில் வந்து விடுவார்கள் உங்கள் கண் காணாத நண்பர் பட்டாளத்தார். இது ஒரு வகையிலான மாய நட்பு வட்டம். ஆனால் இந்த மாய வலையில் சிக்கிக் கொண்டு அவஸ்தையில் உழல்பவர்கள் எண்ணிக்கையிலடங்காதோர்.