அம்மாவின் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என்று முடிவு செய்து திட்டமிட்டு எதிரிகளும், துரோகிகளும் தூண்டி விட்டதே இந்த திடீர் வருமான வரிச் சோதனைகளுக்கான காரணம் என அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தனது வெற்றி உறுதியாகி விட்டதால்; அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஓபிஎஸ் அணியினர், தனது வெற்றிக்கு பக்கபலமாக தனது ஆதரவாளர்கள் மேலும் வலு சேர்த்து விடக் கூடாது என்று திட்டமிட்டு தனது ஆதரவாளர்களை முடக்கும் நோக்கத்தில் இப்படியான நடவடிக்கைகளை தூண்டிவிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் மற்றும் பாண்டியராஜன் இருவருக்கும் இது தான் வேலை என்றும் அவர் கூறியுள்ளார்.