அசீரணம், வயிற்று உப்பிசம், வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்றவற்றால், பித்த நோய்களால் அவதிப்படும் பலரும், பித்தத்தை தணிக்க கொத்துமல்லியை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். இது பல்வேறு காரணங்களால் அதிகரித்த கல்லீரல் செயல்பாட்டை குறைத்து பித்தத்தை தன்னிலைக்கு கொண்டு வரும்.
வளர்ப்பித்த தீதலாது சத்தி அடாது என்று தேரையரின் நோய்களுக்கான முதல் காரணம் கூறுகின்றது. பித்தம் அதிகமாகாமல் வாந்தி (சத்தி) ஏற்படாது என்பது இதன் பொருள். ஆகையால் தனியா விதையுடன், சீரகம்,ஏலக்காய் சேர்த்து கஷாயமாக்கி கொடுத்தாலும் பித்தம் குறையும். கல்லீரல் குளிர்ச்சி அடையும். பாலுடன் இதை சேர்த்தும் காய்ச்சி குடிக்கலாம். இது சிறுநீரைப் பெருக்கும் தன்மையும் கொண்டுள்ளது.