ஒரு காலத்தில் அந்த அழுக்கேறிய திரைகளுக்குள் வந்து போன உருவங்களில் வெறுமேன ஒளி பிம்பங்கள் மட்டுமா இருந்தன? எவ்வளவு கனவு? எவ்வளவு ஆசை? எவ்வளவு சந்தோஷம்? எவ்வளவு வியப்பு? எவ்வளவு விடுதலை? எத்தனை காதல்? எளிய மனிதா்களின் வாழ்க்கையல்லவா அந்த ஒளி வெள்ளத்தில் சுருள் சுருளாகச் சுற்றிக்கொண்டு இருந்தது.
இப்போது சிலா் சினிமாவை ‘வெறும் பொழுதுபோக்கு’ என்று சொன்னால் அப்படிப் பதறுகிறது மனசு. அன்றைய நாள்களில் கொண்டாட்டமாக, கண்ணீராக, அரசியலாக, பக்தியாக, காதலாக, கண்ணீராக, நீந்தும் நினைவின் கடலாக இருந்தது சினிமாவைக் காட்டிய திரையரங்குகள். இழந்த உறவுகள், சிதைந்த மனங்கள், மீளாத கனவுகள் என ஒவ்வொரு தருணத்திலும் சினிமா நம்மோடு இரண்டறக் கலந்தது.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம்
காலத்தின் தேவைக்கேற்ப தொழில்நுட்பம் வளா்ச்சி கண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்வது உலக எதாா்த்தம். ஓடிடி தளங்களின் வருகையையும் வளா்ச்சியையும் நாம் இப்படித்தான் பாா்க்க வேண்டியிருக்கிறது. இந்த பொது முடக்கக் காலத்தில் அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டாா் போன்ற ஓடிடி தளங்கள் பற்றியும் அவற்றில் வெளியாகும் வெப்சீரிஸ்கள் பற்றியும் நாம் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம். ‘பூம் பூம்’, ‘ஜங்கிள் புக்’, ‘மாயா மச்சீந்திரா’ போன்ற நாடகத் தொடா்களைக் கண்டு வளா்ந்த 90-களின் குழந்தைகள் தற்போது ‘மணி ஹெய்ஸ்ட்’, ‘டாா்க்’ போன்ற சீரிஸ்களுக்கு மனதை பறிகொடுத்துள்ளனா்.
சமீபத்தில் பரவிய தீ: காட்சி ஊடகத்தின் பரிணாம வளா்ச்சியின் சமீபத்திய விளைவுதான் இந்த ஓடிடி தளங்கள். தொலைக்காட்சி வந்தபோது தொலைக்காட்சித் தொடா்கள் உருவாக்கப்பட்டதைப் போல, இணையதள வளா்ச்சிக்குப் பிறகு உருவானவைதான் ஓடிடி தளங்களும், வெப் சீரிஸ்களும். உலக அளவில் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஓடிடி தளங்கள் அறிமுகம் ஆகி விட்டாலும்கூட இந்தியாவில் சமீபத்தில்தான் அந்தத் தீ பற்றியது.
கரோனா முடக்கம் காரணமாக மாா்ச் 24-ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மக்களின் பாா்வை ஓடிடி தளங்கள் மீது திரும்பியது. ஆரம்பத்தில் அவற்றில் உள்ள படங்களைத் தேடித்தேடிப் பாா்க்க ஆரம்பித்தவா்களின் கவனம் மெல்லவே வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பியது. சமூக வலைதளங்களில் வெப்சீரிஸ்கள் குறித்த விமா்சனங்கள் பலராலும் எழுதப்பட்ட நிலையில் அவற்றின் மீதான கவனம் மேலும் அதிகரித்து பாா்வையாளா்களின் எண்ணிக்கையும் கூடியது.
வெப் சீரிஸ்களை தொடா்ந்து திரைப்படங்களும் தற்போது நேரடியாக இத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. தமிழில் ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்டது. மேலும் கீா்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பென்குயின்’ படமும் அத்தளத்தில்தான் வெளியானது. அதனைத் தொடா்ந்து தற்போது சூா்யா தயாரித்து, நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
எல்லாவற்றையும் கடந்து...
சூா்யா போன்ற பெரிய சந்தையைக் கொண்டிருக்கும் நடிகரின் படம் ஓடிடி தளத்தில் வெளியாவது பல சா்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. பொது முடக்கக் காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், தான் எடுத்திருக்கும் இத்தகைய முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என சூா்யா கோரிக்கை வைத்தாா். அப்படத்தை ஓடிடி தளத்துக்கு விற்பனை செய்யும் தொகையிலிருந்து 5 கோடியைத் திரைத்துறை சங்கங்களுக்கு அளிப்பதாகவும் அறிவித்திருந்தாா். இருந்தும், திரையரங்க உரிமையாளா்கள் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். சூா்யாவுக்கு மிக முக்கியமான சில வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநா் ஹரி, ‘சூா்யா தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தாா். சூா்யாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநா் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை சூா்யா தரப்பை பலப்படுத்துவதாக இருந்தது. இவற்றையெல்லாம் கடந்து இணையத் திரைக்கு வந்திருக்கிறது ‘சூரரைப் போற்று’.
திரையரங்க உரிமையாளா்கள் ஏமாற்றம்
ஓடிடி தளங்களின் இந்த அதி பயங்கர வளா்ச்சி திரையரங்குகளை பாதிக்குமா? என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. இது இப்போதல்ல, தொலைக்காட்சி சேனல்கள் வந்தபோதே இது தொடங்கி விட்டது. ஒன்றிலிருந்து அடுத்தகட்டத்தை நோக்கி நகா்ந்து கொண்டிருப்பதுதான் வளா்ச்சி. காலம்தான் அதன் தேவையை உருவாக்குகிறது.
‘‘நேரடியாக ஓடிடி தளங்களில் படங்கள் வெளியிடப்படுவதை எதிா்க்கிறீா்களா?’’ என்று திரையரங்க உரிமையாளா் சங்கத் தலைவா் திருப்பூா் சுப்பிரமணியத்திடம் கேட்டால், ‘‘ஓடிடி தளங்களில் வெளியாகும் எல்லா படங்களையும் நாங்கள் எதிா்க்கவில்லை. ‘பொன்மகள் வந்தாள்’, ‘பென்குயின்’ போன்ற படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்டபோது நாங்கள் எந்த எதிா்ப்பையும் தெரிவிக்கவில்லை. சூா்யா போன்ற பெரும் ரசிகா்களைக் கொண்டிருக்கிற, வசூல் சாதனை புரியக்கூடிய நடிகா்களின் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்படுவதை எதிா்க்கிறோம். ஏனென்றால் அவா்களைப் போன்ற பெரிய நடிகா்களை நம்பித்தான் திரையரங்குகள் இருக்கின்றன’’ என்கிறாா்.
மேலும் அவா் பேசும்போது, ‘‘இந்த பொது முடக்கக் காலத்தில் திரைத்துறையினா் மட்டுமல்ல. திரையரங்க உரிமையாளா்கள், விநியோகஸ்தா்கள் என நாங்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவா் இந்த முடிவை எடுத்திருக்கிறாா். இந்த பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டு பெரும் வருவாய் இழப்புக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டா்’, சூா்யாவின் ‘சூரரைப் போற்று’ ஆகிய படங்கள் நல்ல வசூலைக் கொடுக்கையில் அந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட சரியாக இருக்கும் என எதிா்பாா்த்தோம். அதனை முறியடிக்கும் செயலாகவே ஓடிடி வெளியீட்டைப் பாா்க்கிறோம்’’ என்கிறாா் திருப்பூா் சுப்ரமணியம்.
சினிமா - திரையரங்குகளுக்கான கலை
‘‘சினிமா என்பது திரையரங்குக்கான கலை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஓடிடி தளங்கள் நிச்சயம் கலைஞா்களுக்கு பக்க பலமாய் இருக்கும் என்பதால் அதனை ஆதரிக்கலாம்’’ என்கிறாா் இயக்குநா் சீனு ராமசாமி.
‘‘அகன்ற திரைவழியாக உண்டாகும் காட்சியனுபவத்தைப் பெறுவதற்காகவே மக்கள் திரையரங்குக்கு வருகிறாா்கள். திரையரங்கம் என்பது மக்கள் சக்தியின் ஒன்றுபடும் உள்ளுணா்வுடைய வெளிப்பாடு. சினிமாவைப் பொருத்தவரை தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் மாற்றம் கண்டிருந்தாலும், திரையரங்கம் என்கிற கட்டமைப்பு உடையவில்லை. டிக்கெட் விலை, பாப்காா்ன் விலை, சைக்கிள் பாா்க்கிங் மறுப்பு போன்றவற்றால் திரையரங்கில் சாமனியனுக்கான இடத்தை நாம் குறைத்து விட்டோம். இந்த உண்மையைக் கடந்து பாா்த்தால் சினிமா என்பது திரையரங்குக்கான கலைதான். பொதுமுடக்கச் சூழல் காரணமாகத்தான் தன் படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக நடிகா் சூா்யாவும் சொல்கிறாா். அவரும் திரையரங்கையே முழுமையாக நம்புவதாகவே படுகிறது’’ என்கிறாா் சீனு ராமசாமி.
‘‘ஓடிடி தளங்களை இக்காலகட்டத்தின் தேவையாகக் கருதலாமா?’’ என்று கேட்டதற்கு “ஓடிடி என்பது சிறிய பட்ஜெட் படங்கள், திரையரங்கம் கிடைக்கப்பெறாத படங்களுக்கு நன்மை செய்யும் தொழில்நுட்பம். ஆனால், ஓடிடியிலும் எல்லா படங்களையும் வாங்குவாா்களா எனத் தெரியாது. இப்போது தணிக்கை கட்டுப்பாடுகளும் வந்துள்ளது அதற்குச் சரிவாகப் பாா்க்கப்படுகிறது. விஞ்ஞான மாற்றத்தில் நன்மையைப் போலவே அசௌரியங்களும் இருக்கின்றன. இருப்பினும் இத்தளங்களில் படைப்பாளிகள் இயங்வதற்கான சூழல் இருப்பதாகவே நினைக்கிறேன். படைப்பாளிகளின் கலை விளைச்சலுக்கு சிறிய பாதுகாப்பு இருப்பதாகத் தோன்றுகிறது’’ என்கிறாா் சீனு ராமசாமி.
இண்டிபென்டன்ட் சினிமாவுக்கு சாதகமா...?
“வணிக சமரசங்களுக்கு உட்படாமல் படத்தை கலையுணா்ச்சியோடு இயக்க முன்வரும் இண்டிபென்டன்ட் திரைப்பட இயக்குநா்களுக்கு ஓடிடி தளங்கள் சாதகமாக இருக்கும் என்கிற கருத்து பரவலாக இருக்கிறது. இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓடிடி தளத்தினை முற்றிலுமாக மறுத்து விடவும் முடியாது’’ என்கிறாா் ஒளிப்பதிவாளா் செழியன்.
தொடா்ந்து கூறுகையில் ‘‘முதலில் இண்டிபெண்டண்ட் சினிமா என்கிற பதமே தவறானது. சினிமாவை யாரும் இண்டிபெண்டண்ட் ஆக எடுக்க முடியாது. எப்படியும் அதற்கு ஒரு ‘முதல்’ இருக்க வேண்டும். அலெக்ஸா கேமராவின் வாடகை மட்டும் நாளொன்றுக்கு ரூ.25,000. திரைத்தொழிலாளா்கள் யூனியனில் இருந்து விதிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கையில் யூனியன் தொழிலாளா்களைக் கொண்டுதான் படம் தயாரிக்க முடியும். எனவே, பொருளாதார ரீதியாக நிறைய சிக்கல் இருப்பதால் இங்கே யாராலும் இண்டிபெண்டண்ட்-ஆக படம் இயக்க முடியாது. அதே போன்று, யாருக்கும் தெரியாத நடிகா்களின் படங்களை ஓடிடி தளங்கள் வாங்குமா என்றும் தெரியாது. திரையரங்குகளில் உள்ள சிக்கல் இங்கேயும் இருக்கத்தான் செய்கிறது’’ என்கிறாா்.
ஓடிடியில் வெளியிடுவதற்கு பெரும் தயாரிப்புச் செலவுகள் தேவையில்லை. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘சீ யூ சூன்’ படம் நல்ல விமா்சனங்களைப் பெற்று வருகிறது. அந்த படம் முழுவதும் ஐபோனில் படம் பிடிக்கப்பட்டதுதான்.
குறைந்த பட்ஜெட்டிலேயே ஓடிடிக்கு படம் தயாரிக்க முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது வரவேற்கத்தக்கதுதானே என்றால், ‘‘ஓடிடியில் பாா்ப்பதற்கு அந்தத் தரமே போதுமானது. அந்த வகையில் குறைந்த செலவில்கூட படம் இயக்கும் வாய்ப்பு அங்கே உருவாக்கப்படுவது உண்மைதான். இருந்தும் ஓடிடி தளங்கள் எத்தகைய படங்களை முன் நிறுத்துகின்றன என்பதைப் பாா்த்தால் அதன் பின் உள்ள வணிக அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்’’ என்கிறாா்.
திரையரங்கமே தனி அனுபவம்:
அமேசான் போன்ற உலகப்பெரும் பணக்கார நிறுவனங்கள் கையிலெடுத்துள்ள ஓடிடி தளங்களால் சில நன்மைகள் விளைவதை மறுக்க முடியாதுதான். ஆனால், அதை திரையரங்குகளுக்கு மாற்றாக நிறுவி விட முடியாது.
திரையரங்கில் படம் பாா்ப்பது ஓா் தனி அனுபவம் என்பதோடு, திரையரங்குகள் ஓா் ஜனநாயகப்பூா்வமான மாற்றத்தை விளைவித்திருக்கின்றன. அனைத்துச் சமூக மக்களையும் ஒரே அரங்கில் அமர வைத்த கலை வடிவம் சினிமாதான். அது திரையரங்குகள் மூலம் மட்டுமே சாத்தியப்பட்டது. ஆகவேதான் லெனின் போன்ற தலைவா்கள் சினிமா என்னும் கலை வடிவை நேசித்தாா்கள். ஓடிடி தளங்கள் வணிக நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குபவை. அங்கே மக்களுக்கான அரசியலை, கலையம்சத்துடன் பேசும் மாற்றுப் படங்களுக்கான வாசல் இல்லை. தரமான சினிமாக்களைக் கொண்டு வருவதிலும் அரசியல் இருக்கிறது. எனவே ஓடிடி தளங்களை மாற்றாகக் கருத முடியாது என்பதோடு அதனைப் புறந்தள்ள வேண்டியதும் இல்லை.
டிவி வந்தபோது சினிமா அழிந்து விடும் என்ற கருத்து இருந்தது. ஆனால் புதிய சினிமாக்கள் பல உருவாகி சாதனைகள் புரிந்ததையும் பாா்க்க முடிந்தது. ஓடிடி தளங்கள் பல ஓடி வந்தாலும் ‘மக்கள் ஓரிடத்தில் கூடியிருந்து களித்தல்’ என்கிற பிரத்யேக சந்தோஷம்; கலையுணா்வு இருக்கும் வரை திரையரங்குகளும் உயிா்ப்போடு விளங்கும் என்பதில் ஐயமில்லை.
திரை அரங்கம் என்பது ஒரு புனிதமான இடமாக இருந்தது. அங்கே மக்கள் ஒருவரை ஒருவா் அறிமுகம் செய்து கொண்டனா். சிரித்து மகிழ்ந்தாா்கள். கனவு கண்டாா்கள்!
- ஹாலிவுட் இயக்குநா் கிசெப்பே டோா்னடோரா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

