உழவன் இரா. முருகன், விவசாயம் மட்டுமின்றி, அரசு காடு வளர்ப்புத் திட்டத்தை தனது கிராமத்தில் தொடங்கி, வனப்பகுதியில் காடு வளர்ப்பதிலும், மழைநீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதிலும், வனவிலங்குகளை பாதுகாப்பதிலும், வனத்துறையுடன் இணைந்து செயலாற்றி வருகிறார். கிராமங்களில் புகும் வனவிலங்குகளை மீட்டு வனப்பகுதியில் சேர்த்து வரும் இவர், விவசாயம், காடு வளர்ப்பு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து, சமூக வலைதளங்களில் தற்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்களிலும், பல்வேறு தரப்பினரிடையேயும் வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.