பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

‘மேற்கு வங்க மக்கள் கூறும்போது ராஜிநாமா செய்வேன்’: அமித் ஷா

மேற்கு வங்க மக்கள் கூறும்போது பதவியை ராஜிநாமா செய்வேன் என மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரத்தின் போது தெரிவித்தார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2021, 10:41 am

மேற்கு வங்க மக்கள் கூறும்போது பதவியை ராஜிநாமா செய்வேன் என மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரத்தின் போது தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

நான்காம் கட்ட தேர்தலின் போது மத்திய பாதுகாப்புப் படையால் வாக்குச்சாவடியில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து துப்கூரியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது அமித் ஷா கூறியதாவது,

மேற்கு வங்க மக்கள் கூறும்போது நான் பதவியை ராஜிநாமா செய்வேன். ஆனால் வரும் மே 2ஆம் தேதி உங்கள் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, பாஜகவை தேவையின்றி மம்தா தவறாக பேசுகிறார். மம்தாவுக்கு எதிராக பாஜக போட்டியிடுகிறது என நினைத்துக் கொண்டுள்ளார். மம்தாவுக்கு எதிராக மேற்குவங்க தாய்மார்கள், சகோதரிகள், ராஜ்போங்ஷி சமூகம், கோர்கா சமூகம், தேயிலைத் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் உங்களுக்கு எதிராக போட்டியிடுகிறார்கள்.

மம்தா மேற்கு வங்கத்தை பற்றி பேசுவதைவிட என்னைப் பற்றி அதிகம் பேசுவதை காணலாம். 4வது கட்ட வாக்குப்பதிவின் போது மம்தா தூண்டுதலில் வந்தவர்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மம்தா அவர்களை தூண்டிவிடாமல் இருந்திருந்தால் அவர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.