பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம்: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News image

இன்று சிங்கூரில் நடைபெற்ற பேரணி

Updated On :7 ஏப்ரல் 2021, 10:45 am

மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டோம்ஜூரில் வேட்பாளர் ராஜிவ் பானர்ஜியை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.

இந்த பேரணியின் போது பேசிய அமித் ஷா கூறியதாவது,

நான் ஒரு கிராம பஞ்சாயத்தை மட்டுமே பார்வையிட்டேன், ஆனால் அங்கு மக்களிடம் பார்த்த உற்சாகம், ராஜீப் பானர்ஜி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன். மே 2 ஆம் தேதி, 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பாஜக ஆட்சி அமைக்கும். மம்தா பானர்ஜியின் விரக்தியை அவரது பேச்சுகளிலும் நடத்தையிலும் காணலாம் எனத் தெரிவித்தார்.

இதனிடையே, இன்று மட்டும் பாஜக சார்பில் மேற்குவங்கத்தில் சிங்கூர், டோம்ஜூர், ஹவுரா மத்தியா உள்ளிட்ட இடங்களில் மூன்று பேரணிகள் நடைபெறுகின்றன. 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.