இதனையடுத்து செங்கல்பட்டைச் சேர்ந்த ப.இரமேஷ், விருதுநகர் பி.கருணைதாஸ், விழுப்புரம் எஸ்.திலீப், கரூர் எஸ்.மனோகர், காஞ்சிபுரம் ஜி.செல்வகுமார், சேலம் ஆர்.இளவரசன், கே.அய்யப்பன், சேலம் மாவட்டம், சங்ககிரி எம்.ஆறுமுகம், திருப்பத்தூர் ஆ.அருண்குமார், சி.சரவணன் உள்ளிட்டோர் ஜூலை 18 -ஆம் தேதி முதல் ஜூலை 22 -ஆம் தேதி வரை தினசரி காலை, மாலை ஒரு மணி நேரம் என இரு பிரிவுகளாக பிரித்து இணைய வழி மூலம் பயிற்சியளித்தனர். இப்பயிற்சியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 2500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர்களின் செல்லிடபேசிகளை கொண்டு பள்ளியில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி, டிவிடி மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பித்தல் குறித்து பல்வேறு வகைகளில் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்துள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.