/

அழுகிய நிலையில் தாய், மகள் உடல்கள் மீட்பு

மேற்குவங்க மாநிலம் டம் டம் பகுதியில் தாய் மற்றும் மகளின் உடல் அழுகிய நிலையில் இன்று மீட்கப்பட்டது.

News image
அழுகிய நிலையில் தாய், மகள் உடல்கள் மீட்பு
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

UNI

மேற்குவங்க மாநிலம் டம் டம் பகுதியில் தாய் மற்றும் மகளின் உடல் அழுகிய நிலையில் இன்று மீட்கப்பட்டது.

டம் டம் பகுதி மால் ரோட்டில் உள்ள குடியிருப்பில் அபர்ணா தாஸ் (வயது 60) மற்றும் அவரது மகள் பைஷகி (25) வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் அடித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

குடியிருப்பிற்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் ஒரு அறையின் படுக்கையின் மேல் அபர்ணா இறந்த நிலையில் படுத்திருந்தார். மற்றொரு அறையில் தூக்கில் தொங்கியபடி பைஷகி உடல் இருந்தது. இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், அபர்ணாவின் கணவர் 3 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அதனால் இவர்கள் பல நாள்களாக மன அழுத்தத்தில் இருந்தனர். இவர்களை பார்த்து 2 வாரங்களுக்கு மேல் ஆகிறது என கூறினர்.

இதுகுறித்து டம் டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.