/

உ.பி.யில் ஜீப் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 பேர் பலி, 9 பேர் காயம்

உத்தர பிரதேசம் நசிராபாத் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் 2 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

UNI

உத்தர பிரதேசம் நசிராபாத் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் 2 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர்.

நசிராபாத் பகுதியில் இருந்து லூதியானா பேருந்து நிலையத்திற்கு ஜீப் இயக்கப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை நசிராபாத்தில் வசிக்கும் ராஜராம் (வயது 40), அவரது சகோதரர் வினோத் ஜாகு பாஸி உள்பட 12 பேர் ஜீப்பில் லூதியானா சென்று கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், வேகமாக சென்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நீர் நிரம்பிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இரு சகோதரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில், ஜீப் ஓட்டுநர் உள்பட 10 பேர் மருத்துவமனையில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.