தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தேனியில் சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்

தேனியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

News image
தேனியில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

DIN

தேனியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், கரோனா நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 60 அரசுத் துறை அதிகாரிகள், 1,952 களப் பணியாளர்கள் மற்றும் 2,800 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள் வீடு தேடிச் சென்று கௌரவிக்கப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.