2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அறிவார்ந்த சமுதாயம் அமைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்: ராமதாஸ் ஆசிரியர் தின வாழ்த்து

அறிவார்ந்த சமுதாயம் அமைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில்

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:00 am

DIN


அறிவார்ந்த சமுதாயம் அமைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மாணவர்களை ஏற்றி விடும் ஏணியாகத் திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.  ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும்,  தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும்  உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாட்டிற்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும், அந்த நாடு கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டும் தான் பிற உலக நாடுகளால் மதிக்கப்படும். அத்தகைய மதிப்பை இந்தியாவுக்கு தேடித் தரும் மதிப்பு மிக்க செல்வமாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் தான். கவலைகள் எதுவும் இல்லாமல், மகிழ்ச்சியான மனநிலையில் ஆசிரியர்கள் இருக்கும் நாட்டில் தான் கல்வி வளம் பொங்கிப் பெருகும் என்பது உண்மை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பாடத்திட்ட மாற்றம், தேர்வுமுறை சீர்திருத்தம் என்பன உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவை வரவேற்கப்பட வேண்டியவை. அதேநேரத்தில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த அவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் அவசியம் ஆகும். இவற்றை செய்து முடிப்பதுடன், ஆசிரியர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தி, சாதிப்பதற்காக இந்த நல்ல நாளில் தமிழக மக்களாகிய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.