பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும்: ராம்ஜெத்மலானி வலியுறுத்தல்

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணியை உருவாக்கி, பிரதமர்

News image
Updated On :18 மார்ச் 2018, 3:23 pm

போபால்: பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணியை உருவாக்கி, பிரதமர் நரேந்திர மோடியை வரும் மக்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல மூத்த வழக்குரைஞருமான ராம்ஜெத் மலானி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று இந்தூரில் செய்தியாளர்களிடம் ராம்ஜெத்மலானி பேசுகையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும். 

பாஜக மற்றும் காங்கிரஸ் அரசுகள் கருப்பு பணத்தை ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் இருந்து கொண்டு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் தோல்வி அடைந்துவிட்டன. அவர்கள் இருவரும் சேர்ந்து மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். 

கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் மீது நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் என்.டி.ஏ அரசாங்கத்திற்கு அதிகாரத்தில் இருக்க உரிமை இல்லை கடுமையாக விமர்சித்த ஜெத்மலானி வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து நீக்க நேர்மையான தலைவர்களை கொண்டு மூன்றாவது அணி அமைய வேண்டும்.  

அந்த மூன்றாவது அணி மம்தா தலைமையில் அமையலாம் என்றும் பிரதமர் ஆவதற்கு மம்தா தகுதியானவர் என்று ஜெத்மலானி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.