காபூல் விமான நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல்: 11 பேர் பலி
காபூல் விமான நிலையத்தில் தற்கொலை படையினர் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


காபூல் விமான நிலையத்தில் தற்கொலை படையினர் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் காயம் அடைந்தனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபராக இருக்கும் அப்துல் ரஷீத் டோஸ்டம் நாடு திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவ ஜெனரலாக இருந்த இவர் மீது போர்க்குற்ற விசாரணை நடந்தது.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...