புதுதில்லி: வரும் 2019 மக்களவைத் தேர்தலில் தனித்து 150 இடங்களில் வெற்றிபெற முடியும் என்றும் ஒருமித்த கருத்துடைய மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் பங்கு என்பது அது இந்தியாவின் குரலாக ஒலிக்க வேண்டும். மேலும் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் பொறுப்பு அதற்கு உள்ளது.
இந்தியாவின் கல்வி நிலையங்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழை மக்கள் மீது பாஜக நடத்திய தாக்குதலை நினைவு கூர்ந்த ராகுல், காங்கிரஸ் கட்சியின் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுந்து போராட வேண்டியது காங்கிரஸ் கட்சியினரின் பங்கு என்று வலியுறுத்தினார்.
சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் இந்த காரியக் கமிட்டி உருவானது. இந்த மன்றத்தில் தான், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக விவாதித்தது, கருத்துகளை வெளியிட்டது, போட்டியிட்டது, கருத்துகளை ஒன்றிணைத்தது. ஒவ்வொரு இந்தியனிடமும் காங்கிரஸ் காரியக் கமிட்டி தனது குரலை கொண்டு சேர்த்தது. அது இந்தியாவின் பல பார்வைகளை ஒருங்கிணைத்தது, மேலும் இந்தியாவின் வலுவிழந்த குரல்களுக்கும் அது இடமளித்தது.
நமது கூட்டு சவாலே தற்போதைய காரியக் கமிட்டியை அந்த அளவுக்கு கொண்டு செல்வது தான்.
காரியக் கமிட்டியில் இளைஞர் மற்றும் அனுபவம் உள்ளவர்களிடம் சமநிலையை கொண்டு வர முயன்றுள்ளோம். இதில், "அனுபவமும் ஆற்றலும் கொண்ட கமிட்டி. அது கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் மற்றும் எதிர்காலத்தையும் இணைக்கும் பாலமாக அமையும்" என்று ராகுல் பேசினார்.
அவரது பேச்சுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,
காங்கிரஸ் தற்போது மக்களவையில் 48 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 12 மாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக உள்ளதால், 2019 மக்களவைத் தேர்தலில் தனித்து 150 இடங்களில் வெற்றிபெற முடியும் என்றவர் மாநிலங்களில் கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருமித்த கருத்துடைய மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும். மாநிலங்களில் உள்ள மூத்த தலைவர்கள் கட்சியின் நிலைப்பாட்டை மேம்படுத்துவதற்காக மாநில கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைப்புக்காக பாடுபட வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கரூா் மாவட்டத்தில் 92.65% வாக்குப்பதிவு

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


