இஸ்லாமாபாத்: வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவுவதற்கு பாகிஸ்தான் தயாரக உள்ளது என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் 22-வது பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் கடந்த 18-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த ஒரு வாரமாக பெய்த வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரூ.19,512 கேடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரது டுவிட்டர் பக்கத்தில், ஷபாகிஸ்தான் மக்களின் சார்பாக கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்துகொள்வதாகவும், இயற்கை பேரிடர் பேரழிவில் இருந்து விரைவில் மீண்டுவர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு நாடுகள் அளிக்கும் ரூ.700 கோடி நிதியுதவியைப் பெற ஆர்வம் காட்டும் கேரள அரசு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுக் கொள்ள வழி வகை செய்ய வேண்டும் என்றும், இயற்கைப் பேரிடரின் போது ஒற்றுமைக்கான நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்றுக் கொள்வதே சரி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். அவ்வாறு பெறவில்லை என்றால், அதனை மத்திய அரசே அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


