புதுதில்லி: தேசிய கொடியானது இந்திய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துவது, எனவே சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைத்து குடிமக்களும் பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளை உபயோகிக்க வேண்டாம் எனவும் அனைத்து மாநிலங்களுக்கும் மாநிலக் கோரிக்கைகள் வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளை உபயோகிக்காத படி மின்னணு மற்றும் அச்சு ஊடகத்தில் விளம்பரத்தப்பட வேண்டும்.
மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், நிர்வாகங்கள், அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் துறைகள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளுக்கு பதிலாக காகித்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். சுதந்திர நிகழ்ச்சிக்கு பின்னர் காகிதத்தால் ஆன தேசிய கொடிகளை கைவிடப்படவோ அல்லது தூக்கி எறியவோ கூடாது. மேலும், தேசிய கொடிக்கு உலகளாவிய அன்பு, மரியாதை மற்றும் விசுவாசம் உள்ளது. இந்திய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துவது தேசிய கொடி. எனவே, சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை உரிய மரியாதையுடன் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


