நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கூவாகம் சித்திரைப் பெருவிழா இன்று தொடக்கம்

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்வர் கோயில் சித்திரைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:57 pm

கி. சுரேஷ்குமார்

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்வர் கோயில் சித்திரைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கிறது.

   விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் பிரசிதிப் பெற்ற கூத்தாண்வர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறும். இதில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொள்வர்.

   செவ்வாய்க்கிழமை காலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் நிகழாண்டு திருவிழா தொடங்குகிறது. இதைதொடர்ந்து 6-ஆம் தேதி பந்தலடி எம்.தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் மாலையில் தாலிகட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

  விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ஆம் தேதி சாமிக்கு கண் திறக்கும் நிழ்ச்சி நடைபெறும். அன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

  வரும் 22-ஆம் தேதி வரை 18 நாள்கள் இந்தப் பெருவிழா நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.