ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அரசு அதிகாரிகள் தற்கொலை நிகழ்வுகளை தடுக்க விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: எஸ்.காந்திசெல்வன்

தமிழகத்தில் தொடரும் அரசு அதிகாரிகள் தற்கொலை நிகழ்வுகளை தடுக்க விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்

Updated On :23 செப்டம்பர் 2015, 11:50 am

தமிழகத்தில் தொடரும் அரசு அதிகாரிகள் தற்கொலை நிகழ்வுகளை தடுக்க விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக நாமக்கல் கிழக்கு மாவட்டச்செயலர் எஸ்.காந்திசெல்வன் பேசினார்.

 திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு  மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

 இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலருமான எஸ்.காந்திசெல்வன் பேசியது: நேர்மையானவர்களை உயர் அதிகாரிகள் தரக்குறைவாகவே நடத்துகின்றனர். அமைச்சரால் மிரட்டப்பட்ட வேளாண் உயரதிகாரி அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இப்போது பெண் டி.எஸ்.பி ஒருவர் தற்கொலை நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை தடுக்கவும், விஷ்ணுபிரியா தற்கொலையில் உண்மை நிலை வெளியே தெரியவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  சிபிசிஐடி விசாரணையால் உண்மையான காரணம் வெளிவராது என்றார்.

 நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் கே.எஸ்.மூர்த்தி, மாநில விவசாய அணி இணைசெயலாளர் பார்.இளங்கோவன் மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.