டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குடிநீர் கேட்டு துத்திப்பட்டு கிராமத்தில் சாலை மறியல்:  போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:36 am

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லையாம்.  இதுகுறித்து பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படவில்லை.

ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் ஷூ மற்றும் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் அமைந்திருப்பதால் அச்சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.  மேலும் பேர்ணாம்பட்டுக்கும் அதிக எண்ணிக்கையில் பஸ் மற்றும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலை மறியல் காரணமாக இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.  மேலும் ஷூ மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள் என அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உமர்ஆபாத் போலீஸார், ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா ஆகியோர் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.   ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.    சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.