காமராஜர் மணிமண்டபம்: நூலகர், காப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு
விருதுநகர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் ஆகிய


விருதுநகர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் ஆகிய பணியிடத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.]
இது குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெயஅருள்பதி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இப்பணியிடத்திற்கு ஆதிதிராவிடர்(முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்), முன்னுரிமையற்றவர்( அருந்ததியர் எவரும் இல்லாத பட்சத்தில்) என்ற இனச்சுழற்சி அடிப்படையில் பணியிடம் நிரப்பட உள்ளது. இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஏதாவது பல்கலைக்கழகத்தில் நூலக தகவல் அறிவியல்(சி.எல்.ஐ.எஸ்) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 14-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...