இந்நிலையில், புதன்கிழமை மாலையில் இவரது பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் வீட்டின் கிரீல் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கதவும் திறந்து கிடப்பதாக செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தாராம். இதைத் தொடர்ந்து உடனே பெங்களூருவில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு விருதுநகருக்கு வியாழக்கிழமை காலையில் வந்து பார்த்துள்ளார். அப்போது, வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ளே சென்று பார்க்கையில் பூஜையறையில் பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசு உள்ளிட்ட 33 சவரன் நகைகளை தான் யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.