இதைக் கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தியாகி சங்கரலிங்கானார் மணிமண்டபத்தை காணொலிக் காட்சி மூலம் பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கி வைத்தார். அதையடுத்து, மணிமண்டபத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார் திருவுருவச் சிலைக்கு ஆட்சியர் வே.ராஜாராமன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஆணையாளர் முஜிப்பூர் ரகுமான், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.