இது தொடர்பாக மாணவன் பெற்றோரிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பெற்றோர் விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் புகார் செய்ததை தொடர்ந்து, நிர்வாகம் தாற்காலிக நடத்துநர் பழனிச்சாமியை தாற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பணி முடிந்து நள்ளிரவில் ஒவ்வொரு பேருந்துகளாக போக்குவரத்து கிளைக்கு வரும் போது நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதையடுத்து, ஓய்வறைகளில் இருந்த அனைவரையும் அழைத்து வந்து நடத்துநரின் தாற்காலிக பணிநீக்கத்தை கண்டித்தும், அதை உடனே திரும்ப பெறக்கோரியும், இல்லாவிட்டால் பேருந்துகளை இயக்கமாட்டோம் என நள்ளிரவில் முற்றுகையிடும் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.