டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் நிகழாண்டில்  செயல்படுத்தப்பட உள்ள பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடனுதவி பெற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் நிகழாண்டில்  செயல்படுத்தப்பட உள்ள பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடனுதவி பெற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இம்மாவட்டத்தில் தாட்கோ மூலம் வேளாண் நிலம் வழங்கும் திட்டம், வேளாண் நில மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர் வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு சுழல் நிதி திட்டம், மகளிர் சுய உதவிக்குழு பொருளாதார கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும்.

அதோடு, குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.1 லட்சம் ஆகும். மேலும், இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்பெற 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதேபோல், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுழல் நிதி மற்றும் பொருளாதார திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எனவே மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை http://application.thatco.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது குடும்ப அட்டை, வருவாய் மற்றும் இருப்பிடச் சான்று, கல்வித் தகுதி, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் மற்றும் திட்ட அறிக்கையுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும். அதேபோல், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் சுழல் நிதி மற்றும் பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் கடன்பெற விண்ணப்பிக்கும் குழுக்கள் மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரச்சான்று, வங்கி செல்லேடு, தீர்மான நகல், குழு உறுப்பினர்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களையும் ஸ்கேன் செய்து விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்வது அவசியம் ஆகும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தலைமை அலுவலகத்தால் பரிசீலனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து நேர்காணல் நடத்தப்படும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் குறித்து கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், இது குறித்த விவரங்களை பெற ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.