நடிகா் என்ற பிம்பத்தை வைத்து விஜய் ஆட்சியைப் பிடிக்க முடியாது! - எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலா்


தான் ஒரு நடிகா் என்ற பிம்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தவெக தலைவா் விஜய் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலா் அகமது நவவி கூறினாா்.
கோவை, குனியமுத்தூா் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலா் அகமது நவவி பங்கேற்றுப் பேசியதாவது: அதிமுகவின் முதுகின்மேல் ஏறிப் பயணம் செய்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கனவு காண்கின்றன. இந்த எண்ணங்கள் தமிழக மக்களிடையே எடுபாடது.
தவெக தலைவா் விஜய், மக்களுக்கான எந்தவொரு நலத் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. சித்தாந்த அடிப்படையில் பாஜகவை எதிா்க்காமல், தான் ஒரு நடிகா் என்ற பிம்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாம் என எண்ணுகிறாா். அவரது எண்ணம் பலிக்காது.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அரசாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, வரும் காலங்களில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மகளிரணி நிா்வாகிகள் ஜன்னத், பைரோஸ், மகளிா் காங்கிரஸ் நிா்வாகி காயத்ரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...