டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

விருதுநகர் அருகே ஆற்றுப்பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை வெள்ளிக்கிழமை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆற்றுப்பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை வெள்ளிக்கிழமை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி ஆற்றுப்பகுதி ஓரத்தில் முதியவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வச்சக்காரப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பார்த்த போது 60 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்து கிடந்தார்.

கிராம மக்களிடம் போலீஸார் விசாரித்தில் முதியவரின் அடையாளம் தெரியவில்லை. பின்னர் முதியவரின் சடலத்தை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து துலுக்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.