சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சாத்தூர் அருகே அனுமதியின்றி வைத்திருந்த வெடிபொருள்கள் பறிமுதல்

சாத்தூர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி வைத்திருந்த  வெடிபொருள்களான ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர் உள்ளிட்டவைகளை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:55 am

எஸ். பாண்டியன்

சாத்தூர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி வைத்திருந்த  வெடிபொருள்களான ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர் உள்ளிட்டவைகளை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சாத்தூர் அருகே அருணாச்சலபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் அனுமதியின்றி வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தலட்சுமி தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் இதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு 163 டெட்டனேட்டர், 44 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் 300 மீட்டர் வயர் ஆகியவைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனே வெடிபொருள்களை பறிமுதல் செய்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் கல்குவாரி உரிமையாளர் வெள்ளைச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.