ஆனால் பாதிக்கப்பட்ட காவலர்களை உள்துறை செயலரோ, காவல் துறை உயரதிகாரிகளோ சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவோ, அவர்களுக்கு உதவிபுரியாமல் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. சமூக அமைதியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆம்பூரில் நடந்ததை வெளி உலகிற்கு தெரியாமல் போலீஸார் மறைப்பது என்பது நாளை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். காவல் துறையினருக்கே இத்தகைய நிலை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆம்பூரில் இந்து சமுதாய மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து எந்த ஒரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்காமல் மௌனம் காக்கின்றனர். அதனால் சட்டம் மதம் சார்ந்ததாக இருக்கின்றதோ என்ற எண்ணம் இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று கூறினார்.