பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், உதவித் தொகைக்கான காசோலை ஆகியவைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். இதில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் அ.வசந்தா, ஒன்றியக்குழு தலைவர்கள் கி.கலாநிதி(விருதுநகர்), வேலாயுதம்(சாத்தூர்), காளிமுத்து(ஸ்ரீவில்லிபுத்தூர்), சுப்பிரமணியன்(சிவகாசி), நகராட்சி தலைவர் மா.சாந்தி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஐ.பாண்டியம்மாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, புதுவாழ்வு திட்ட அலுவலர் சண்முகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.