2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகளுக்கு நீர் தொட்டிகள் அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோடைக்காலத்தில் யானைகளின் தாகம் தீர்க்கும் வகையில் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் தண்ணீர் தொட்டிகள் அமைக்க ரூ.10 லட்சம் அரசு ஒதுக்கீடு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:31 am

எஸ். பாண்டியன்

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோடைக்காலத்தில் யானைகளின் தாகம் தீர்க்கும் வகையில் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் தண்ணீர் தொட்டிகள் அமைக்க ரூ.10 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தாணிப்பாறை, சேத்தூர் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மரங்கள் மற்றும் விலங்களையும் பாதுகாக்கும் வகையில் வனத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மழை இல்லாத காலங்களில் இரை தேடியும், தண்ணீருக்காகவும் வன விலங்குகளான யானை, மான், முள்ளம் பன்றி ஆகியவைகள் மலை அடிவாரப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதோடு, அங்குள்ள பயிர்களையும், மரங்களையும் வேரோடு சாய்த்து நாசம் செய்தும் விடுகின்றன. இதனால், விவசாயிகள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்று வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் குறிப்பிட்ட பகுதிகளில் யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் அடிவாரப்பகுதியில் மின்மோட்டார் வசதியுடன் ஆழ்குழாய் கிணறு அமைத்து, 150 மீட்டர் இடைவெளியில் தலா ரூ.5 லட்சத்தில் 2 தண்ணீர் தொட்டிகள் வனத்துறை மூலம் மேற்கொள்ள ரூ.10 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் மலை அடிவாரப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக வனக்கோட்ட அலுவலர் அசோக்குமார் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.