தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2014-15 ஆண்டில் சட்டப்பேரவை விதி 110-ன் படி 100 அரசு உ யர்நிவைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக மாத ஊதியம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.