2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தரம் உயர்த்திய பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி  ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:30 am

எஸ். பாண்டியன்

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி  ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2014-15 ஆண்டில் சட்டப்பேரவை விதி 110-ன் படி 100 அரசு உ யர்நிவைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக மாத ஊதியம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் சென்று கேட்டால் முறையான தகவல் தெரிவிக்கவும் மறுத்து வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் ரா.வேல்முருகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 900 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டன.

அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கான அரசு ஆணை 148ல் உத்தரவிட்டுள்ளது. இந்த அரசு ஆணையை வைத்து மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள்

ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மட்டும் ஊதியம் பெற முடியாத நிலையிருக்கிறது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் முறையிட்டோம். அவரும் மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

ஆனால் இதுவரையில் கல்வித்துறையிடம் இருந்து எதுவும் உத்தரவு வரவில்லை என காரணம் கூறி கருவூலத்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றார். இது குறித்து கருவூலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பள்ளிகள் தரம் உயர்ததப்படும் போது பணியிடங்களக்கான மொத்த செவினத்திற்கான கருத்துரு பள்ளிக் கல்வி துறையிடம் இருந்து நித்துறை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.
அதற்கான ஆணை இன்னும் பெறப்படப்பல்லையென்றும்,

இதனால் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாத நிலை நிலவுவதாக கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.