நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்றவர் கைது

கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சனிக்கிழமை போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:29 am

சி.சண்முகவேல்

கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சனிக்கிழமை போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் செல்லவதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் மதுரை மாவட்டம், கோவில்பட்டி,சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் அழகப்பன்(50), என்பவர்,  அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் சேது (50) என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கோலாலம்பூர் செல்ல இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அழகப்பனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.