பகுதிநேர துப்புரவு பணியாளர்: முன்னுரிமையுடையோர்-ஆதிதிராவிடர்(அருந்ததியினர்) மற்றும் முன்னிரிமையுடையோர்(ஆதரவற்ற விதவை)-31.12.2014, ஆதிதிராவிடர் முன்னுரிமையுடையோர் (ஆதரவற்ற விதவை)-31.12.2014, ஆதிதிராவிடர் முன்னுரிமையுடையோர்(கலப்பு திருமணம் புரிந்தோர்)-17.10.2011, பழங்குடியினர் முன்னுரிமையுடையோர்-31.12.2-14 வரையும். முன்னுரிமையற்றோர்-ஆதிதிராவிடர்(அருந்ததியினர் பெண்கள் மட்டும்)27.10.1997, ஆதிதிராவிடர்(அருந்ததியினர்) இருபாலரும்-16.8.1995, ஆதிதிராவிடர் (பெண்கள் மட்டும்)-26.6.2001, ஆதிதிராவிடர்(இருபாலரும்)-14.10.1998 வரையும் பதிவு மூப்பு இருக்க வேண்டும்.
மேற்காணும் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் மட்டுமே பரிந்துரைக்கப்பட இருக்கின்றனர். அதனால், இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றுகள் மட்டும் குடும்ப அட்டை ஆகியவைகளுடன் சூலக்கரை தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பதிவு மூப்பு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.