அப்போது, மர்ம நபர்களுடன் நகையை பறிக்க விடாமல் போராடி அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் சத்தம் போட்டு உதவிக்கு அழைத்துள்ளார். அதற்குள் நகையை பறித்துக் கொண்டு பைக்கில் ஏறி திரும்பும் போது கற்களில் இடறி கீழே விழந்த நிலையில் பொதுமக்கள் கூட்டமாக வருவதை அறிந்து அவசரத்தில் எழும் போது அந்த இடத்திலேயே திருடிய நகைகளையும், பைக்கையும் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக செல்வமணி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த இடத்தில் விட்டுச் சென்ற பைக்கில் போலீஸ் என எழுதப்பட்டிருந்தது குறித்தும், யாருக்கு சொந்தமானாது என்பது குறித்தும் விசாரித்தனர்.