ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

பொன்மலை அருகே சங்கிலியாண்புரம்,சபாபதி தெருவில் செவ்வாய்க்கிழமை 2 பேர் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திóருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு

Updated On :20 ஜனவரி 2015, 3:00 pm

திருச்சி பொன்மலை அருகே சங்கிலியாண்டபுரத்தில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பொன்மலை அருகே சங்கிலியாண்புரம்,சபாபதி தெருவில் செவ்வாய்க்கிழமை 2 பேர் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திóருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ,ஆய்வாளர் பாலுச்சாமி, பொன்மலை உதவி ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் மேற்கண்ட தெருவை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இரண்டு பேர் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள், தேவதானம் காவேரி சாலையைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் தேவராஜன்(19), ந்தாமணி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் தயாளன்(31) ஆகியோர் என்பதும், இதில் தயாளன் மனித விடியல் என்ற வார இதழில் செய்தியாளராக பணியாற்றி வருவதும் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 460 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.