ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் பணம் திருட்டு
மதுரை பைபாஸ் சாலை துரைச்சாமி நகர் 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன் (60). பொதுத்துறை வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன், மகள் சென்னையில்


மதுரையில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
மதுரை பைபாஸ் சாலை துரைச்சாமி நகர் 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன் (60). பொதுத்துறை வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன், மகள் சென்னையில் உள்ளனர்.கடந்த டிசம்பரில் மனைவியுடன் சென்னைக்குச் சென்ற முத்துராமன் செவ்வாய்க்கிழமை காலை மதுரை வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கிரில் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.மேலும் வீட்டிற்குள் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், 300 யூரோ பணம் மற்றும் வெள்ளிக் குத்துவிளக்கு, கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை திருடுபோயிருந்தன.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...