விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(44). இவர் தனது தேவைக்காக தென்காசி ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜான் அமல்ராஜூடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இக்கடனுக்கு ஆதாரமாக சென்னையில் உள்ள தனது சொத்தின் பவர் பத்திரம் மற்றும் தொகை குறிப்பிடாத காசோலையையும் கொடுத்திருந்தாராம். இந்நிலையில், கடந்தாண்டு சக்திவேல் கடன் பணத்தை ஜான் அமல்ராஜூடம் கொடுத்துள்ளார். அப்போது, பவர் பத்திரத்தை மட்டும் கொடுத்துள்ளார். இதற்கிடையே மீண்டும் ஜான் அமல்ராஜ் பவர் பத்திரம் போலியாக தயாரித்து ரூ.41 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு தரமுடியாது எனக் கூறி சக்திவேல் எதிர்ப்பு தெரிவி்த்தாராம்.