தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் பணப்பையை திருடியவர் கைது

விருதுநகர் சூலக்கரை மின்வாரிய காலனியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(50). இவர் தனது குடும்பத்தினருடன் நாகர்கோவில் சென்று சனிக்கிழமை இரவு விருதுநகர் ரயில் நிலையத்தில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:20 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் ரயில் நிலையத்தில் பெண் பயணியின் பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபரை பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் சூலக்கரை மின்வாரிய காலனியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(50). இவர் தனது குடும்பத்தினருடன் நாகர்கோவில் சென்று சனிக்கிழமை இரவு விருதுநகர் ரயில் நிலையத்தில் இரங்கினாராம். பின்னர் 2-வது நடைமேடையில் இருந்து முதல் நடைமேடை பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் போது முத்துராமலிங்கத்தின் மனைவி காளீஸ்வரி வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் பறித்துச் கொண்டு ஓடினாராம்.

அதில், ரொக்கம், ஏ.டி.எம் கார்டு மற்றும் கைபேசி ஆகியவை இருந்தது. பின்னர் அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்ததை தொடர்ந்து விரைவாக துரத்திச் சென்று பிடித்து மர்ம நபரை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், போலீஸார் விசாரணை செய்ததில் மதுரை அருகே ஹார்விபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணின் மகன் மணிகண்டன் என்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிந்து கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.