விருதுநகர் அருகே முத்துராமன்பட்டி சிவந்திபுரம் தெருவைச் சேர்ந்த வேல்ராமின் மகள் சக்திபூர்ணிமா(30). இவருக்கும் ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த அன்பழகனின் மகன் முத்துமுருகனுக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, 35 சவரன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டதாம். இதைத் தொடர்ந்து திருமணமான இரண்டு மாதத்திலேயே நகை, ரொக்கத்தையும் முத்துமுருகனின் குடும்பத்தினர் வாங்கி வைத்துக் கொண்டார்களாம். இதையடுத்து கணவர் சென்னைக்குச் வேலைக்குச் சென்ற நிலையில், விருதுநகரில் மாமியார் விஜயா வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, ஒவ்வொரு நாளும் கூடுதலாக வரதட்சணை வேண்டும் எனக் கூறி மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் சித்ரவதை செய்துள்ளனர். இதற்கு கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.