நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதன்படி 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை வேலைக்கு வைத்திருக்கும், கடைக்காரர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை படிக்க வைப்பதற்காக கடந்த 2005ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் இந்த சிறப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது.
இதுகுறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 20 குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில் மொத்தம் 515 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 66 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கு 8ஆம் வகுப்பு வரை கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதேபோல் தையல் உள்ளிட்ட தொழிற்கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ.150 வழங்குகிறது. அந்த தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இவர்கள் பயிற்சி மையத்தை விட்டு செல்லும்போது மொத்தமாக அந்த பணம் கொடுக்கப்படுகிறது. 14 வயதை பூர்த்தியடைந்ததும், மாணவர்கள் அவர்களின் விருப்பப்படி படிக்கவோ அல்லது வேலை செய்யவோ அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.
குழந்தை தொழிலாளர்கள் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்:
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலும், கடைகளிலும் வேலை செய்துவரும், ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படாமலே உள்ளனர். தொழிற்சாலைகள், கடைகள், பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களையும், பிச்சை எடுக்கும் குழந்தைகளையும் மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

