சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு 

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66  குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:08 am

கே.விஜயபாஸ்கா்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66  குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதன்படி 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை வேலைக்கு வைத்திருக்கும், கடைக்காரர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை படிக்க வைப்பதற்காக கடந்த 2005ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் இந்த சிறப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது.

இதுகுறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியது,  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 20 குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில் மொத்தம் 515 பேர் பயின்று வருகின்றனர்.  கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 66 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கு 8ஆம் வகுப்பு வரை கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதேபோல்  தையல் உள்ளிட்ட தொழிற்கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.  இந்த மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ.150 வழங்குகிறது. அந்த தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இவர்கள் பயிற்சி மையத்தை விட்டு செல்லும்போது மொத்தமாக அந்த பணம் கொடுக்கப்படுகிறது. 14 வயதை பூர்த்தியடைந்ததும், மாணவர்கள் அவர்களின் விருப்பப்படி படிக்கவோ அல்லது வேலை செய்யவோ அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.

குழந்தை தொழிலாளர்கள் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்:

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலும், கடைகளிலும் வேலை செய்துவரும், ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படாமலே உள்ளனர். தொழிற்சாலைகள், கடைகள், பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களையும், பிச்சை எடுக்கும் குழந்தைகளையும் மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.