திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல மருத்துவரின் வீட்டில், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி ரூ.3 லட்சம் பணம், 11.5 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருள்கள் திருடு போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அதேபோல், கடந்த மாதம் 16ஆம் தேதி திண்டுக்கல் ஆர்எம் காலனி பகுதியில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரிடம் ரூ.6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் வழிபறி செய்தாக, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த வழக்குகளிலும் தொடர்புடைய 2 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.