இப்போது பக்தர்கள் கட்டண வரிசை, இலவச தரிசன வரிசையின் மூலமே செல்கின்றனர். இந்த நிலையில் திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ.வான பி.ஆர்.சிவா, சிறப்பு அனுமதியளிக்கும் வகையில் பக்தர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கோயில் நிர்வாகத்திற்கு சிபாரிசு கூப்பன் கையெழுத்திட்டு வழங்குகிறார். இதைப் பார்த்து போலீஸார் அனுமதிக்கின்றனர். இதிலும் சிலர் முறைகேடு செய்வதாகவும், இதனால் கோயில் நிர்வாகத்திற்கு வருமான இழப்பு ஏற்படுவதாகவும், பேரவை உறுப்பினரின் சிபாரிசு செய்யும் கூப்பன் முறையை தடை செய்யவேண்டுமென பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டது.