தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் பெற்றோர்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனையடுத்து தொடர்புடைய இளைஞர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமலையப்பபுரம் பஜனை மடத்தெருவைச் சேர்ந்த கனி (எ) பக்கீர்மைதீன் மகன் முகமது ஜெய்லுதீன் ஆசாத் (19), அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், சுடலைமாரி, தங்கமாரி மற்றும் பொட்டல் புதூரைச் சேர்ந்த தலையாரி செல்லப்பா மகன் கிருஷ்ணசாமி (19) ஆகியோர் மாணவிகளை கிண்டல் செய்தது தெரிய வந்தது.